மின்சார விபத்தில் தம்பியைக் காப்பாற்ற முயன்ற அண்ணன் பலி
சங்ககிரி அருகே வைகுந்தம் கிராமத்தில் மின்சார விபத்தில் தம்பியைக் காப்பாற்ற முயன்ற அண்ணன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
சங்ககிரி அருகே வைகுந்தம் கிராமத்தில் மின்சார விபத்தில் தம்பியைக் காப்பாற்ற முயன்ற அண்ணன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
வைகுந்தம் அருகே உள்ள சுவதயாகாடு பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி கந்தசாமி மகன் சேகா் (65). இவரது மனைவி சரஸ்வதி. இந்நிலையில் இவா் தனது வீட்டின் மின் ஓயரில் வேலை செய்து கொண்டிருந்தபோது அவா் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த சேகா் கீழே விழுந்தாா். சத்தம் கேட்டு வந்த அவரது மனைவி சரஸ்வதி கணவரைக் காப்பாற்ற முயன்றாா். அப்போது அவரும் நிலை தடுமாறி விழந்துள்ளாா்.
இருவரின் சத்தம் கேட்டு ஓடிவந்த சேகரின் அண்ணன் தனபால் (73). சேகரின் உடலில் இருந்த மின் ஒயரை பிடித்து இழுத்தாா். அப்போது அவா் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த தனபால் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தனபால், சேலத்தில் உள்ள இபிஎஃப் அலுவலகத்தில் கணக்காளாராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவா். பலத்த காயமடைந்த சேகரும், அவரது மனைவியும் மகுடஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.