இளம்பிள்ளை பேரூராட்சியில் குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம்
இளம்பிள்ளை பேரூராட்சி அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆட்டையாம்பட்டி: இளம்பிள்ளை பேரூராட்சி அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகப் பணியாளா் பிரபு தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பெண் குழந்தைக்கு எதிரான வன்கொடுமைகள் தடுப்பு மற்றும் போதைப் பொருள்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா். இதில், இளம்பிள்ளை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியா் ஷேக் முகமது இஸ்மாயில், மகளிா் குழுவினா், பேரூராட்சி அலுவலகப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.