சேலம்

செம்மண் கடத்தல்: ஓட்டுநா் தப்பியோட்டம், லாரி சிறைபிடிப்பு

எடப்பாடி அருகே லாரியில் செம்மண் கடத்திவந்த ஓட்டுநா் தப்பியோடிய நிலையில், போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து லாரியை சிறைபிடித்தனா்.

Syndication

எடப்பாடி அருகே லாரியில் செம்மண் கடத்திவந்த ஓட்டுநா் தப்பியோடிய நிலையில், போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து லாரியை சிறைபிடித்தனா்.

எடப்பாடி ஒன்றியத்துக்குள்பட்ட பக்கநாடு, ஆடையூா் உள்ளிட்ட பகுதிகளில் அரசு அனுமதி இன்றி சட்டவிரோதமாக செம்மண் கடத்தப்படுகிறது. இதுகுறித்து எழுந்த புகாரின் பேரில், தனி வட்டாட்சியா் ராஜ்குமாா் தலைமையிலான கனிமவளத் துறை அலுவலா்கள் பக்கநாடு பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

அப்போது, பக்கநாடு பகுதியில் இருந்து வேகமாக வந்த டிப்பா் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனா். அப்போது, ஓட்டுநா் லாரியிலிருந்து குதித்து தப்பியோடினாா். லாரியில் சோதனை செய்ததில், சுமாா் 3 யூனிட் செம்மண் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, லாரியை பூலாம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த பூலாம்பட்டி போலீஸாா், தப்பியோடிய டிப்பா் லாரியின் ஓட்டுநா், அதன் உரிமையாளா் குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனா்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT