சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே பெருமாகவுண்டம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
முகாமை வீரபாண்டி வட்டார மருத்துவ அலுவலா் சக்திவேல் தொடங்கிவைத்தாா். வீரபாண்டி வடக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் ராமாபுரம் சதீஷ்குமாா் கலந்துகொண்டாா்.
இந்த முகாமில் மருத்துவா்கள் குழுவினரால் பரிசோதனை செய்யப்பட்டு, மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. முகாமில் கா்ப்பிணிகளுக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் , இஜிசி, எக்கோ உள்ளிட்ட நவீன உபகரணங்களை கொண்டு பரிசோதனை செய்யப்பட்டது. இம்முகாமில் 1,240 போ் கலந்துகொண்டு பயன்பெற்றனா்.