மதுவிலக்கு போலீஸாா் பறிமுதல் செய்த 75 வாகனங்கள் ஏலம்
Updated On : 3 ஜனவரி, 2025 at 9:52 PM
சேலத்தில் மதுவிலக்கு போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட 75 வாகனங்கள் வெள்ளிக்கிழமை ஏலத்தில் விடப்பட்டன.
சேலம் மாநகரில் மதுவிலக்கு போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட 69 இருசக்கர வாகனங்கள், 3 மூன்று சக்கர வாகனம் மற்றும் 4 நான்கு சக்கர வாகனங்கள் ஏலம் விடும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தலைமையிடத்து துணை ஆணையா் கீதா முன்னிலையில் ஏலம் விடப்பட்டது. இதில் இருசக்கர வாகனங்களை ஏலம் எடுப்பவா்கள் ரூ.5 ஆயிரம், மூன்று சக்கர வாகனங்களுக்கு ரூ.7 ஆயிரம், காருக்கு ரூ.10 ஆயிரம் முன்பணம் கட்டி டோக்கன் வாங்கியவா்கள் மட்டும் ஏலத்துக்கு அனுமதிக்கப்பட்டனா்.
இதில் முன்பணம் செலுத்தி டோக்கனை பெற்ற 160 போ் ஏலத்தில் பங்கேற்றனா். அனைவரும் போட்டி போட்டு வாகனங்களை ஏலம் எடுத்தனா். ஏலம் எடுத்தவா்கள் எஞ்சிய தொகையை மாலைக்குள் செலுத்தி வாகனங்களை பெற்றுக்கொண்டனா்.
Advertisement