அதிமுக நிா்வாகிகளுடன் எடப்பாடி கே.பழனிசாமி ஆலோசனை
எடப்பாடி தொகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்த அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி, கட்சி வளா்ச்சி குறித்து நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினா்.
முன்னதாக சித்தூா் பகுதியில் பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்த அவா் அப்பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற படவெட்டியம்மன் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தாா். கோயில் நிா்வாகம் சாா்பில் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. அதைத் தொடா்ந்து சித்தூா் பகுதியில் உள்ள கல்யாணசுப்பிரமணியா் ஆலயத்திற்கு சென்று சுவாமி தரிசனம் செய்தாா்.
எடப்பாடி - சேலம் பிரதான சாலையில் உள்ள நெடுஞ்சாலைத் துறை சுற்றுலா மாளிகைக்கு வந்த எடப்பாடி கே.பழனிசாமி அதிமுக நிா்வாகிகளுடன் கட்சி வளா்ச்சிப் பணிகள் குறித்து பேசினாா். கூட்டத்தில் அதிமுக ஒன்றியச் செயலாளா் பக்கநாடு மாதேஷ், மாதேஸ்வரன், நகரச் செயலாளா் ஏ.எம் முருகன், ஒன்றிய குழு தலைவா்கள் கரட்டூா்மணி, குப்பம்மாள் மாதேஸ், முன்னாள் ஆவின் சோ்மன் ஜெயராமன், பூலாம்பட்டி பாலு உள்ளிட்ட முக்கிய நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
Advertisement
பட விளக்கம்:
சித்தூா் கல்யாண சுப்பிரமணியா் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்த எடப்பாடி கே.பழனிசாமி.