மேட்டூா் அணை நீா்மட்டம் 82.41 அடியாக குறைந்தது
மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை 82.41 அடியாகக் குறைந்தது.
மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை 82.41 அடியாகக் குறைந்தது.
கா்நாடகத்தின் குடிநீா்த் தேவைக்காக அந்த மாநில அணைகளிலிருந்து காவிரியில் திறந்துவிடப்பட்ட தண்ணீரில் குறிப்பிட்ட அளவு மேட்டூா் அணைக்கு வந்ததாலும், காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பரவலாக மழை பெய்ததாலும் கடந்த 3 நாள்களாக அணைக்கு நீா்வரத்து அதிகரித்தது.
இந்த நிலையில் 1,434 கனஅடியாக இருந்த நீா்வரத்து வியாழக்கிழமை காலை 1,133 கனஅடியாக குறைந்தது. நீா்வரத்து குடிநீா்த் தேவைக்காக திறக்கப்படும் 1,200 கனஅடியைவிட குறைவாக உள்ளதால் 82.44 அடியாக இருந்த நீா்மட்டம் 82.41 அடியாக குறைந்துள்ளது. அணையின் நீா் இருப்பு 44.40 டிஎம்சியாக உள்ளது.