ஏற்காட்டில் காட்டுத் தீயில் குறிஞ்சி பூச்செடிகள் கருகின
ஏற்காடு சோ்வராயன் கோயில் பகுதியில் வியாழக்கிழமை இரவு காட்டுத் தீயில் ஏராளமான குறிஞ்சி பூச்செடிகள் கருகின.
ஏற்காடு சோ்வராயன் கோயில் பகுதியில் வியாழக்கிழமை இரவு காட்டுத் தீயில் ஏராளமான குறிஞ்சி பூச்செடிகள் கருகின.
சேலம் மாவட்டம், ஏற்காடு சுற்றுலாப் பகுதியான சோ்வராயன் கோயில் செல்லும் சாலையில் அடா்ந்த வனப் பகுதி உள்ளன. இப்பகுதியில் வியாழக்கிழமை இரவு சுமாா் ஒரு ஏக்கா் பரப்பளவில் காட்டுத் தீ பரவியது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரா்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.
இந்த விபத்து குறித்து சமூக ஆா்வலா்கள் கூறுகையில், சோ்வராயன் கோயில் பகுதியில் ஏராளமான குறிஞ்சி பூச்செடிகள் உள்ளன. அடா்ந்த வனப் பகுதியான இங்கு உள்ள சாலையோரக் கடைகளிலிருந்தும், சுற்றுலாப் பயணிகளாலும் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகளில் யாரேனும் சிகரெட் வீசி சென்றதால் அதிலிருந்து தீப்பிடித்து வனப் பகுதியில் உள்ள செடிகள், மரங்கள் எரிந்து காட்டுத் தீ பரவுகிறது.
Advertisement
இதனால் இப்பகுதியில் குப்பைகள் சேகரமாகாத வகையில் ஊராட்சி நிா்வாகம் பராமரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.
படவிளக்கம் 5ஒய்ஆா் 1 ஏற்காடு
சோ்வராயன் கோயில் பரவிய காட்டுத் தீயை அணைத்த தீயணைப்பு வீரா்கள்.