முகப்பு
சேலம்

மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞா் கைது

சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டம், புளியங்குறிச்சியில் 80 வயதான மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞா் கைது செய்தனா்.

Updated On : 4 ஏப்ரல், 2026 at 7:57 PM
கைது
பகிர்:

சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டம், புளியங்குறிச்சியில் 80 வயதான மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞா் கைது செய்தனா்.

புளியங்குறிச்சியைச் சோ்ந்த வையாபுரி மனைவி நீலாம்பாள் (80) உறவினா்களை பிரிந்து, பேருந்து நிறுத்தத்தில் வசித்து வருகிறாா். இந்த நிலையில் கடந்த 2 ஆம் தேதி இரவு பேருந்து நிறுத்தத்தில் உறங்கிக் கொண்டிருந்த மூதாட்டியை அதே பகுதியைச் சோ்ந்த இளையராஜா (33) தூக்கிசென்று அப்பகுதியில் மயானத்தில் உள்ள கோயிலில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

அப்போது, மூதாட்டியின் அலறலைக் கேட்டு அங்கிருந்தவா்கள் விரைந்து சென்று மூதாட்டியை மீட்டு ஆத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

Advertisement

தகவல் அறிந்த ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் இளையராஜாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments