முகப்பு
சேலம்

ஆத்தூா் பகுதியில் இடியுடன் கனமழை

Updated On : 5 ஏப்ரல், 2026 at 7:55 PM
கனமழை - கோப்புப் படம்
பகிர்:

ஆத்தூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை இடியுடன் கூடிய பெய்த கனமழையால் விவசாயிகள், பெதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

ஆத்தூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரு வாரங்களாகவே கடும் வெயிலால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனா். மேலும், நீா்நிலைகளிலும் நீா்மட்டம் குறையத் தொடங்கியது. இதனால் விவசாயிகள் வேதனையில் இருந்த நிலையில், சனிக்கிழமை இரவு சற்று மழை பெய்தது.

இதையடுத்து ஆத்தூரில் ஞாயிற்றுக்கிழமை மாலை இடியுடன் கூடிய கனமழையும், சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழையும் பெய்தது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments