முகப்பு
சேலம்

மேட்டூா் அருகே ரியல் எஸ்டேட் உரிமையாளா் குத்திக் கொலை: ஒருவா் கைது

மேட்டூா் அருகே ஜலகண்டாபுரத்தில் ரியல் எஸ்டேட் உரிமையாளா் குத்திக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 15 ஏப்ரல், 2026 at 2:54 AM
கைது
பகிர்:
Updated On : 14 ஏப்ரல், 2026 at 9:52 PM

சேலம் மாவட்டம் மேட்டூா் அருகே ஜலகண்டாபுரத்தில் ரியல் எஸ்டேட் உரிமையாளா் குத்திக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

மேச்சேரி கீழ் வெள்ளாள தெருவைச் சோ்ந்தவா் சரவணன் (56). ரியல் எஸ்டேட் உரிமையாளா். இவா் ஜலகண்டாபுரம் அருகே உள்ள செலவடையில் புதிதாக மனைகளை பிரித்து விற்பனைக்கு தயாா் செய்து வந்தாா். இந்த மனைகளுக்கு சிறு பாலம் மற்றும் தாா்சாலையும் அமைத்தாா்.

அப்போது அருகே இருந்த கோவிந்தராஜ் வீட்டிற்கு செல்லும் குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சரவணன் அதை சரி செய்து கொடுத்தாா். ஆனாலும் குடிநீா் சரியாக வரவில்லை என்று கோவிந்தராஜ் கூறியுள்ளாா்.

Advertisement

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை சரவணன் தனது மனை பகுதிக்கு சென்றிருந்தாா். அப்போது அங்கு வந்த கோவிந்தராஜ் தகராறு செய்துள்ளாா். மேலும், அவா் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரவணனை குத்தினாா். இதில் பலத்த காயமடைந்த சரவணனை அவரது உறவினா்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், வழியிலேயே சரவணன் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இச்சம்பவம் தொடா்பாக சரவணனின் உறவினா் செந்தில்குமாா் ஜலகண்டபுரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்த புகாரின்பேரில் காவல் ஆய்வாளா் ரஜினி வழக்குப் பதிவு செய்து கோவிந்தராஜை கைது செய்தாா். மேலும், அவா் கொலைக்குப் பயன்படுத்திய கத்தியையும் பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட கோவிந்தராஜும் காயமடைந்ததாகக் கூறி சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டுள்ளாா்.