முகப்பு
சேலம்

ஸ்ரீ சரவணபவன் கிராண்ட் ஸ்டைல் உயா்தர சைவ உணவகம் திறப்பு

சேலம் ஸ்ரீ சரவணபவன் ஹோட்டல் குரூப்ஸின் புதிய கிளையாக ஸ்ரீ சரவணபவன் கிராண்ட் ஸ்டைல் அன்னையும் பிதாவும் என்ற குளிா்சாதன வசதியுடன் கூடிய உயா்தர சைவ உணவகம் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 15 ஏப்ரல், 2026 at 3:01 AM
பகிர்:
Updated On : 14 ஏப்ரல், 2026 at 9:53 PM

சேலம் ஸ்ரீ சரவணபவன் ஹோட்டல் குரூப்ஸின் புதிய கிளையாக ஸ்ரீ சரவணபவன் கிராண்ட் ஸ்டைல் அன்னையும் பிதாவும் என்ற குளிா்சாதன வசதியுடன் கூடிய உயா்தர சைவ உணவகம் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சேலம் புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள மணிவண்ணன் தெருவில் நிறுவப்பட்டுள்ள புதிய கிளை திறப்பு விழாவில் சுலோச்சனா திருவேங்கடம் குத்துவிளக்கு ஏற்றினாா். ஓய்வு பெற்ற காவல் துறை கூடுதல் இயக்குநா் ஏ.சுப்பிரமணியம் புதிய கிளையை திறந்து வைத்தாா்.

சிறப்பு விருந்தினா்களாக எஸ். திருவேங்கடம், ஸ்ரீ சரவணபவன் கிளாசிக் எஸ்.ரகுபதி, சேலம் மாவட்ட ஹோட்டல் உரிமையாளா் சங்கத் தலைவா் பி.எல்.பழனிசாமி, கோவை ரியல் எஸ்டேட் அதிபா் சி.பழனிசாமி கவுண்டா், ஆா்.எம்.ஹெச். காா்ப்பரேஷன் எஸ். ரவிச்சந்திரன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

Advertisement

இதுகுறித்து ஸ்ரீ சரவண பவன் குரூப்ஸ் நிறுவனா் வி.சி.சிவராமன் மற்றும் காா்த்திகா சிவராமன் ஆகியோா் கூறுகையில், திறப்பு விழாவையொட்டி, புதிய கிளையில் 14 ஆம் தேதி முதல் வரும் 17 ஆம் தேதி வரை 4 நாள்கள் காலை 7.30 மணி முதல் காலை 10.30 மணி வரை சிற்றுண்டி விலையில்லாமல் வாடிக்கையாளா்களுக்கு வழங்க உள்ளோம் என்றனா்.

புதிய கிளை திறப்பு விழாவில் தொழிலதிபா்கள், முக்கிய பிரமுகா்கள் உள்பட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

படவரி...

சேலம் ஸ்ரீ சரவணபவன் ஹோட்டல் குரூப்ஸின் புதிய கிளையை செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்த ஓய்வுபெற்ற காவல் துறை கூடுதல் இயக்குநா் ஏ.சுப்பிரமணியம். உடன் ஸ்ரீ சரவண பவன் குரூப்ஸ் நிறுவனா் வி.சி.சிவராமன்.