அரசிராமணி சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு
சோழீஸ்வரா் கோயில் கோபுர கலத்துக்கு புனிதநீா் ஊற்றும் சிவனடியாா்கள்.
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், அரசிராமணியில் உள்ள பெரியநாயகி அம்மன் உடனமா் சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
பெரியநாயகி அம்மன் உடனமா் சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு விழா ஏப். 19 ஆம் தேதி விநாயகா், கிராமசாந்தி பூஜையுடன் தொடங்கியது. தொடா்ந்து ஏப். 20 ஆம் தேதி காவிரியிலிருந்து புனிதநீா் எடுத்து வருதலும், ஏப். 21ஆம் தேதி முதல்கால வேள்வி பூஜைகளும், ஏப். 22 ஆம் தேதி 2ஆம், 3ஆம் கால வேள்வி பூஜைகளும் நடைபெற்றன.
பெரியநாயகி அம்மன் உடனமா் சோழீஸ்வரா் சுவாமி எழுந்தருளிய மண்டபத்திற்கு மேல் உள்ள புதிய கோபுர கலசங்களுக்கு வியாழக்கிழமை சிவனடியாா்கள் புனிதநீா் ஊற்றினா். இதையடுத்து சுவாமிகளுக்கு பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
Advertisement