முகப்பு
சேலம்

வாக்களித்தவா்களுக்கு மரக்கன்று வழங்கிய ஊரக வளா்ச்சித் துறை

சேலம் வீரபாண்டி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தவா்களுக்கு ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

Updated On : 24 ஏப்ரல், 2026 at 5:30 AM
மாரமங்கலத்துப்பட்டி வாக்குச்சாவடியில் வாக்களித்தோருக்கு மரக்கன்றுகளை வழங்கிய ஊரக வளா்ச்சித் துறையினா்.
பகிர்:

சேலம் வீரபாண்டி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தவா்களுக்கு ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

சேலம் வீரபாண்டி தொகுதிக்கு உள்பட்ட மாரமங்கலத்துப்பட்டி வாக்குச்சாவடி உருக்காலை வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்தது. வாக்காளா்களை கவரும் வகையில் வாழை மரம், பந்தல் தோரணங்களுடன் அமைக்கப்பட்டிருந்த இந்த வாக்குச்சாவடியில் பணியாற்றிய அலுவலா்கள் அனைவரும் பெண்கள்.

மேலும், வாக்குப்பதிவின்போது பெற்றோருடன் வரும் குழந்தைகள் விளையாடுவதற்காக தனி இடமும், பாலூட்டும் தாய்மாா்களுக்காக பிரத்யேக அறையும் அமைக்கப்பட்டிருந்தது. அதேபோல வாக்களித்த 700 பேருக்கு கொய்யா மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

Advertisement