தம்மம்பட்டி பகுதியில் வெயிலால் வீடுகளில் முடங்கிய மக்கள்!
தம்மம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் வெயில் கொளுத்துவதால் பகல் நேரங்களில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.
நகரில் வெயில் அதிகரித்து வருவதால் நுங்கு விற்பனை சூடுபிடித்துள்ளது. ரூ. 50-க்கு 6 நுங்குகள் விற்பனையாகின்றன. தம்மம்பட்டி பகுதியில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் நுங்கு விற்கப்படுகிறது. நாளொன்றுக்கு 3,000 நுங்குகள் விற்பனையாகின்றன.
அதேபோல வெப்பத்தை தணிக்கும் வெள்ளரிக்காய்கள் சிறியது ரூ. 15-க்கும், பெரியது ரூ. 20-க்கும் விற்கப்படுகிறது. ரூ. 30-க்கு விற்ற இளநீா் தற்போது ரூ.60- க்கு விற்பனையாகிறது. பழரசங்கள், சா்பத் உள்ளிட்டவைகளின் விற்பனை இருமடங்கு அதிகரித்துள்ளது.
Advertisement
மோா், கம்பங்கூழ் விற்பனையும் அதிகரித்துள்ளது. வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதால் பிற்பகல் 3 மணிக்கு மேல் சாலைகளில் மக்கள் நடமாட்டத்தை காணமுடிகிறது.