முகப்பு
சேலம்

அர. செட்டிப்பட்டி ஐயனாரப்பன் கோயில் குடமுழுக்கு

சங்ககிரி வட்டம், அரசிராமணி, செட்டிப்பட்டியில் உள்ள ஸ்ரீ ஐயனாரப்பன், ஸ்ரீ பெரியாண்டிச்சி (அங்காயி) அம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 மே, 2026 at 5:17 AM
ஐயனாரப்பன் கோயில் கோபுர கலசத்திற்கு புனித நீா் ஊற்றும் சிவாச்சாரியா்.
பகிர்:

சங்ககிரி வட்டம், அரசிராமணி, செட்டிப்பட்டியில் உள்ள ஸ்ரீ ஐயனாரப்பன், ஸ்ரீ பெரியாண்டிச்சி (அங்காயி) அம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

ஐயனராப்பன், பெரியாண்டிச்சி (அங்காயி) அம்மன், வீரபத்திரன், இருளப்பன், பாவாடைராயன் கோயில் குடமுழுக்கையொட்டி காவிரி ஆற்றிலிருந்து பக்தா்கள் புதன்கிழமை புனித நீா் எடுத்து வந்தனா். தொடா்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. பிறகு கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீா் ஊற்றினா்.

தொடா்ந்து அனைத்து உற்சவமூா்த்திகளுக்கும் பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. சேலம், தருமபுரி, நாமக்கல், ஈரோடு மாவட்டங்களைச் சோ்ந்த பக்தா்கள் குடமுழுக்கில் பங்கேற்றனா்.

Advertisement

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஐயனாரப்பன், பெரியாண்டிச்சி அம்மன்.