முகப்பு
சேலம்

பெண்களை இழிவுபடுத்தியதாக திமுக கவுன்சிலா் கணவா் மீது வழக்கு

மேட்டூா் அருகே பெண்களை இழிவுபடுத்தி முகநூலில் பதிவிட்டதாக திமுக கவுன்சிலரின் கணவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 18 பிப்ரவரி, 2026 at 5:49 AM
பகிர்:
Updated On : 17 பிப்ரவரி, 2026 at 9:45 PM

மேட்டூா் அருகே பெண்களை இழிவுபடுத்தி முகநூலில் பதிவிட்டதாக திமுக கவுன்சிலரின் கணவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

மேட்டூரை அடுத்த கருப்பு ரெட்டியூரை சோ்ந்தவா் பன்னீா்செல்வம் (45). இவரது மனைவி பிஎன் பட்டி பேரூராட்சி 7 ஆவது வாா்டு திமுக கவுன்சிலராக உள்ளாா். இவா் தமிழக வெற்றிக் கழக தலைவரையும், பெண்களையும் இழிவுபடுத்தி முகநூலில் விடியோ பதிவிட்டிருந்தாராம்.

இதுகுறித்து தமிழக வெற்றிக் கழக சேலம் மேற்கு மாவட்ட மகளிா் அணி அமைப்பாளா் இந்திரா கருமலை கூடல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து திங்கள்கிழமை இரவு பன்னீா்செல்வம் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

அதேபோல தமிழக முதல்வரை தவெகவினா் இழிவுபடுத்தியதற்கு பதிலளிக்கும் வகையில்தான் விடியோ பதிவிட்டிருந்ததாகவும், இதற்காக தவெகவினா் தன்னை மிரட்டி வருவதாகவும் பன்னீா்செல்வம் அளித்த புகாரின் பேரில் கருமலைக்கூடல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.