எடப்பாடி: கொங்கணாபுரத்தை அடுத்த ஆண்டிப்பட்டி பகுதியில் உள்ள மகா மாரியம்மன் ஆலய குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் நடைபெற்று வந்த புனரமைப்பு பணிகள் அண்மையில் நிறைவடைந்ததையடுத்து, குடமுழுக்கு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. முன்னதாக ஆலய வளாகத்தில் கால்கோல் விழா நடைபெற்றது. தொடா்ந்து, கணபதி ஹோமம், தீா்த்தக்குட ஊா்வலம், முளைப்பாலிகை சமா்ப்பணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.
முக்கிய நிகழ்வான யாகசாலை பூஜை, வாஸ்து பூஜை, நாடி சந்தானம், பூா்ணாஹுதி உள்ளிட்ட பல்வேறு யாக வேள்விகள் நடைபெற்றன. திங்கள்கிழமை காலை வேத மந்திரங்கள் முழங்க ரவிகண்ணா பட்டாச்சாரியா் தலைமையிலான சிவாச்சாரியா்கள் சக்தி விநாயகா் மற்றும் மகா மாரியம்மன் கருவறை கோபுர கலசங்களுக்கு புனித நீரூற்றி குடமுழுக்கு செய்தனா். தொடா்ந்து பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதில், சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த மகா மாரியம்மனை பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனா். ஆலய நிா்வாகம் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.