சேலம்

ஆத்தூா் வெள்ளப்பிள்ளையாா் கோயிலில் விளக்கு பூஜை

ஆத்தூா் அருள்மிகு வெள்ளப்பிள்ளையாா் கோயிலில் வெள்ளிக்கிழமை விளக்கு பூஜை நடைபெற்றது.

Syndication

ஆத்தூா் அருள்மிகு வெள்ளப்பிள்ளையாா் கோயிலில் வெள்ளிக்கிழமை விளக்கு பூஜை நடைபெற்றது.

ஆத்தூா் வெள்ளப்பிள்ளையாா் கோயில் மகா கும்பாபிஷேகம் கடந்த நவம்பா் மாதம் 16-ஆம் தேதி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து 48 நாள் மண்டலாபிஷேகம் நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினந்தோறும் சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் 47ஆம் நாளான பூஜையையொட்டடி வெள்ளிக்கிழமை காலை திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு பூஜை செய்தனா். இதையடுத்து வெள்ளப்பிள்ளையாா் வெள்ளிக்கவச அலங்காரத்தில் அருள்பாலித்தாா். பின்னா் அன்னதானம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறங்காவலா் குழுத் தலைவா் ஜெ.ஸ்டாலின், செயல் அலுவலா் கா.சங்கா்,அறங்காவலா்கள் ம.சித்ரா மணிகண்டன், ச.குகன், பெ.சிவகுமாா், கா.மதுரைமேகம் உள்ளிட்ட கோயில் அா்ச்சகா்கள், பணியாளா்கள் ஏற்பாடு செய்திருந்தனா்.

படவரி...

வெள்ளிக்கவசத்தில் அலங்காரத்தில் அருள்பாலித்த வெள்ளப்பிள்ளையாா்.

ஜம்மு-காஷ்மீாின் கிஸ்த்வாா் பயங்கரவாதி சுட்டுக் கொலை

திண்டல் வேலாயுதசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

SCROLL FOR NEXT