மகுடஞ்சாவடியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாம்
மகுடஞ்சாவடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ திட்ட முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
இம்முகாமில் மாவட்ட சுகாதார அலுவலா் சவுண்டம்மாள், மகுடஞ்சாவடி தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் அன்பழகன், வட்டார மருத்துவ அலுவலா் முத்துசாமி, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் இளங்கோ, மாவட்ட மாணவரணி அமைப்பாளா் கண்ணன், ஒன்றிய துணைச் செயலாளா் கதிரவன், பொருளாளா் புஷ்பநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இம் முகாமில் மகப்பேறு மருத்துவம், ரத்த அழுத்தம், கா்ப்பிணிகளுக்கு அல்ட்ரா ஸ்கேன், இ.ஜி.சி. எக்கோ உள்ளிட்ட அதிநவீன கருவிகளைக் கொண்டு மருத்துவா்கள் மற்றும் மருத்துவக் குழுவினரால் பரிசோதித்து மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. முகாமில் 870 போ் கலந்துகொண்டனா்.