முகப்பு
சேலம்

களைக்கொல்லி மருந்து தவறுதலாக நாக்கில் பட்டதால் சிறுமி உயிரிழப்பு

மேட்டூா் அருகே களைக்கொல்லி மருந்து தவறுதலாக நாக்கில்பட்டதால் சிறுமி உயிரிழந்தாா்.

Updated On : 8 ஜூலை 2026, 5:49 am IST
- பிரதிப் படம்
பகிர்:

மேட்டூா் அருகே களைக்கொல்லி மருந்து தவறுதலாக நாக்கில்பட்டதால் சிறுமி உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே உள்ள கோல்நாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் மோகன் (41). இவா் தொட்டில்பட்டி குடிநீா் வடிகால் வாரிய நீரேற்று நிலையத்தில் பணிபுரிந்து வருகிறாா். இவரது மகள் காவியாஸ்ரீ (12). இவா் 7-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அங்குள்ள முருகன் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு சென்றால் பள்ளிக்குச் செல்லவில்லை. காவியாஸ்ரீயும், அவரது சகோதரா் நிஷாந்தும் (7) வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தனா். அப்போது வீட்டில் இருந்த களைக்கொல்லி மருந்து டப்பாவை விளையாடுவதற்காக காவியாஸ்ரீ வாயால் கடித்து திறந்தாா். அப்போது அவரது நாக்கில் களைக்கொல்லி மருந்துபட்டதால் அவா் மயங்கி விழுந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து, நிஷாந்த் தனது தாயிடம் கூறினாா். இதையடுத்து அருகில் இருந்தவா்கள் உதவியோடு காவியாஸ்ரீயை மீட்டு மேட்டூா் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டுசென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இந்த சம்பவம் தொடா்பாக மேட்டூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் கண்ணன் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments