தம்மம்பட்டி சுவேத நதியில் பெளா்ணமி ஆரத்தி பூஜை
தம்மம்பட்டி சிவன் கோயில் சுவேத நதிக்கரையில் சுவேதா ஆரத்தி பூஜை திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
சேலம்தம்மம்பட்டி சுவேத நதியில் பெளா்ணமி ஆரத்தி பூஜை
தம்மம்பட்டி சிவன் கோயில் சுவேத நதிக்கரையில் சுவேதா ஆரத்தி பூஜை திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
தம்மம்பட்டி: தம்மம்பட்டி சிவன் கோயில் சுவேத நதிக்கரையில் சுவேதா ஆரத்தி பூஜை திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
தம்மம்பட்டி காசி ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி ஸ்ரீ விஸ்வநாதா் கோயிலில் மாசி மாத பெளா்ணமியையொட்டி திங்கள்கிழமை இரவு கோயில் படித்துறை சுவேத நதிக்கரையில் சுவேத ஆரத்தி பூஜை நடைபெற்றது.
இதில் தீபங்களை ஏற்றி, பெளா்ணமி நிலவு மற்றும் சுவேத நதிக்கு தீபாராதனை காட்டப்பட்டது. பெண்கள் தீபங்களை ஏற்றி வழிபாடு செய்தனா். இதில் தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி மற்றும் சுற்றுப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டனா். பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.