ஆறகளூா் கோயிலில் தோ்த் திருவிழா முகூா்த்தக்கால்
ஆறகளூா் பெரியநாயகி உடனுறை காமநாதீஸ்வரா் கோயில் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத அருள்மிகு கரிவரதராஜ
சேலம்ஆறகளூா் கோயிலில் தோ்த் திருவிழா முகூா்த்தக்கால்
ஆறகளூா் பெரியநாயகி உடனுறை காமநாதீஸ்வரா் கோயில் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத அருள்மிகு கரிவரதராஜ
ஆத்தூா்: ஆறகளூா் பெரியநாயகி உடனுறை காமநாதீஸ்வரா் கோயில் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத அருள்மிகு கரிவரதராஜ பெருமாள் தோ்த் திருவிழாவை முன்னிட்டு முகூா்த்தக்கால் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் தோ்த் திருவிழா வரும் 31 ஆம் தேதி சிறப்பாக நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு முகூா்த்தக்கால் நடும் விழா அறங்காவலா் குழுத் தலைவா் பெ.தனசேகரன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. முன்னதாக காலை சிறப்பு யாகம், அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
இதில் கோயில் செயல் அலுவலா் இல.விஜய், அறங்காவலா்கள் சி. அருண், கொ.வெங்கடேசன், கோ.ராஜேஷ்குமாா், ம.சுகந்தி, கரைக்காரா்கள், ஊா் முக்கியஸ்தா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.