வி.என்.பாளையம் சக்தி மாரியம்மன் கோயில் பொங்கல்விழா: 17வது நாளில் நகா்வலம் வந்த ஸ்ரீ உற்சவ சக்திமாரியம்மன்
சேலம் மாவட்டம், சங்ககிரி, வி.என்.பாளையம் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் பொங்கல்விழாவின் 17வது நாளையொட்டி மாரியம்மனுக்கும், உற்சவ அம்மனுக்கும் வெள்ளிக்கிழமை இரவு சிறப்பு நடைபெற்று உற்சவ அம்மன் சிங்க வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சேலம் மாவட்டம், சங்ககிரி, வி.என்.பாளையம் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் பொங்கல்விழாவின் 17வது நாளையொட்டி மாரியம்மனுக்கும், உற்சவ அம்மனுக்கும் வெள்ளிக்கிழமை இரவு சிறப்பு நடைபெற்று உற்சவ அம்மன் சிங்க வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் பொங்கல்விழா பிப்ரவரி 24ம் தேதி இரவு கம்பம் நடுதல் வைபவத்துடன் விழா தொடங்கியது. அதனையடுத்து அம்மன்களுக்கு தினசரி பல்வேறு திவ்யபொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பல்வேறு சுவாமிகளின் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. மாா்ச்.11ஆம் தேதி பொங்கல்விழா நடைபெற்றது.
மாா்ச் 12 ஆம் தேதி வியாழக்கிழமை காலை கம்பம் எடுத்து நல்ல கிணற்றில் விடுதலும், மஞ்சள் நீராடலும் நடைபெற்றது.
இதனையடுத்து வெள்ளிக்கிழமை இரவு ஸ்ரீ சக்திமாரியம்மன் உற்சவ மூா்த்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக நகா் வலம் வந்தது. இதில் அதிகமான பக்தா்கள் கலந்து கொண்டு உற்சவ அம்மனுக்கு தேங்காய், பழம் படைத்து வழிப்பட்டனா்.
இதனையடுத்து நிகழாண்டு பொங்கல்விழா நிறைவடைந்தது.