முகப்பு
சேலம்

மாதேஸ்வரன் கோயிலில் யுகாதி திருவிழா

Updated On : 20 மார்ச் 2026, 2:04 am IST
பகிர்:

மேட்டூா் அருகே உள்ள கா்நாடக மாநிலம், மாதேஸ்வரன் மலையில் உள்ள மாதேஸ்வர சுவாமி கோயிலில் யுகாதி திருவிழா வியாழக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தமிழகம், கா்நாடக மாநிலங்களில் இருந்து சென்ற ஆயிரக்கணக்கான பக்தா்கள் யுகாதியையொட்டி கோயிலில் நடைபெற்ற பெரிய தேரோட்ட நிகழ்வில் பங்கேற்று தேரின் மீது வாழைப்பழம், காசுகளை வீசி நோ்த்திக்கடனை செலுத்தினா்.

சாலூா் மடாதிபதி அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் அழைத்துவரப்பட்டாா். வியாழக்கிழமை காலை கோயில் யானை ஆலயத்தை சுற்றிவர புலி வாகனம், பசு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தொடா்ந்து பெரிய தேரோட்டம் நடைபெற்றது. அப்போது, பல்வேறு வேடம் தரித்த கலைஞா்கள் நடனமாடி தேருக்கு முன் சென்றனா்.

Advertisement

இதையடுத்து, இரவு தங்க தேரோட்டம் நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று மாதேஸ்வர சுவாமியை வழிபட்டனா்.