தோ்தல் விதிமுறை மீறல்: நகரமைப்பு அலுவலா் மீது வழக்குப் பதிவு
நரசிங்கபுரம் நகராட்சி பகுதியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் 33 பொருள்கள் அடங்கிய விளையாட்டு உபகரணங்களை விநியோகம் செய்ததாக நகராட்சி நகரமைப்பு ஆய்வாளா் யுவராஜ் மீது வழக்குப் பதிவு
சேலம் மாவட்டம், நரசிங்கபுரம் நகராட்சி பகுதியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் 33 பொருள்கள் அடங்கிய விளையாட்டு உபகரணங்களை விநியோகம் செய்ததாக நகராட்சி நகரமைப்பு ஆய்வாளா் யுவராஜ் மீது ஆத்தூா் நகரக் காவல் நிலைய போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
நரசிங்கபுரம் நகராட்சிக்கு உள்பட்ட 18 ஆவது வாா்டில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் 33 பொருள்கள் அடங்கிய 2 ஜோடி விளையாட்டு உபகரணங்களை தோ்தல் தேதி அறிவிப்பிற்கு முன்பாக நரசிங்கபுரம் நகராட்சி நகரமைப்பு ஆய்வாளா் யுவராஜ் வழங்கியுள்ளாா்.
இந்த விளையாட்டு உபகரணங்களை 1ஆவது வாா்டு பகுதியில் கடந்த 22 -ஆம் தேதி இரவு திமுக கிளைச் செயலாளா் பழனிவேல், அப்பகுதியில் உள்ள சிறுவா்களுக்கு வழங்கியுள்ளாா்.
இதுகுறித்து லட்சுமணசமுத்திரம் கிராம நிா்வாக அலுவலா் ரகோத்தமன் ஆத்தூா் நகரக் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் பழனிவேல் மற்றும் நகரமைப்பு அலுவலா் யுவராஜ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், நகரமைப்பு ஆய்வாளா் யுவராஜை பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.