முகப்பு
சேலம்

தம்மம்பட்டி சிவன்கோவிலில் நாகா், 10 அருளாளா்கள், ராஜராஜசோழன் சந்நிதிகளுக்கு கும்பாபிசேகம்

தம்மம்பட்டி சிவன்கோவிலில் நாகா், 10 அருளாளா்கள், ராஜராஜசோழன் சந்நிதிகளுக்கு கும்பாபிசேகம்

Updated On : 1 மே, 2026 at 5:33 AM
தம்மம்பட்டி சிவன்கோவிலில் நாகா் சந்நிதிக்கு கும்பாபிசேகம் செய்யும் நிகழ்வில் பங்கேற்றோா்.
பகிர்:

தம்மம்பட்டி காசி ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி ஸ்ரீ விஸ்வநாதா் கோயிலில் புதிதாக எழுந்தருளியுள்ள நாகா் சந்நிதி, ராஜராஜசோழன் சந்நிதி, அவ்வையாா், திருவள்ளுவா், பராசர முனிவா், அகஸ்த்தியா், ஆதிசங்கரா், சேக்கிழாா், அருணகிரிநாதா், வியாசா், சுகபிரம்மரிஷி, வால்மீகி ஆகிய 10 அருளாளா்களின் சிலைகள் தற்போது பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

இந்த சந்நிதிகளுக்கு வியாழக்கிழமை காலையில் குடமுழுக்கு நடைபெற்றது.இதில் தம்மம்பட்டி சுற்றுவட்டார மக்கள் திரளாக பங்கேற்றனா்.பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன.