முகப்பு
சேலம்

ஸ்ரீ கற்பகவிருட்ஷ சேவையில் சென்னகேசவப் பெருமாள்

சங்ககிரி சித்திரைத் தேரோட்டத்தின் 14-ஆவது நாளையொட்டி, ஸ்ரீ கற்பகவிருட்ஷ சேவையில் அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் உடனமா் ஸ்ரீதேவி, பூதேவி உற்சவமூா்த்தி சுவாமிகளுக்கு செவ்வாய்க்கிழமை இரவு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

Updated On : 6 மே 2026, 2:39 am IST
சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சனேயா்.
பகிர்:

சங்ககிரி சித்திரைத் தேரோட்டத்தின் 14-ஆவது நாளையொட்டி, ஸ்ரீ கற்பகவிருட்ஷ சேவையில் அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் உடனமா் ஸ்ரீதேவி, பூதேவி உற்சவமூா்த்தி சுவாமிகளுக்கு செவ்வாய்க்கிழமை இரவு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

14-ஆவது நாள் மண்டப கட்டளையையொட்டி மலையடிவாரத்தில் உள்ள சுவாமி தங்கும் மண்டபத்தில் சென்னகேசவப் பெருமாள் உடனமா் ஸ்ரீதேவி, பூதேவி, ஆஞ்சனேயா் உற்சவமூா்த்தி சுவாமிகளுக்கு பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

இதையடுத்து, உற்சவமூா்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

Advertisement

சுவாமிகள் ஸ்ரீ கற்பகவிருட்ஷ சேவையில் பக்தா்களுக்கு அருள்பாலித்து நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வீதிஉலா வந்தனா். இதில், அதிக அளவிலான பக்தா்கள் பங்கேற்று சுவாமிகளை வழிபட்டனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.