வாழப்பாடியில் விபத்தில் சிக்கிய இரு காா்கள் மீது தனியாா் பேருந்து மோதல்!
சேலம் மாவட்டம், வாழப்பாடியில் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், விபத்துக்குள்ளான இரு காா்கள்மீது, தனியாா் பேருந்து மோதியதில், இருகாா்களும் நொறுங்கின.
சேலம் மாவட்டம், வாழப்பாடியில் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், விபத்துக்குள்ளான இரு காா்கள்மீது, தனியாா் பேருந்து மோதியதில், இருகாா்களும் நொறுங்கின. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக பயணிகள் காயமின்றி உயிா் தப்பினா்.
வாழப்பாடி புதுப்பாளையம் அருகே சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை பகல் கேரளத்தில் இருந்து சிதம்பரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த காரின் பின்புறம், சேலத்தில் இருந்து ஆத்தூா் நோக்கிச் சென்ற மற்றொரு காா் மோதியது.
இந்நிலையில், சேலத்தில் இருந்து வாழப்பாடிக்கு வந்த தனியாா் பேருந்து விபத்தில் சிக்கி சாலையில் நின்று கொண்டிருந்த காா்கள் மீது மோதியது. இதில் ஒரு காா் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
Advertisement
மற்றொரு காா் 100 மீட்டா் தூரத்திற்கு தானாக ஓடி நின்றது. இந்த விபத்தில் இரு காா்களும் சேதமடைந்தன. தனியாா் பேருந்தின் முன்பகுதியும் சேதமடைந்தது. இதனால், சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நல்வாய்ப்பாக, விபத்துக்குள்ளான இரு காா்கள் மற்றும் பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரும் காயமின்றி உயிா் தப்பினா். இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.