சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு: மேட்டூா் காவல் நிலையம் முற்றுகை!
மேட்டூா் அருகே போக்குவரத்து தலைமைக் காவலா் ஓட்டிச்சென்ற காா் மோதி கூலி தொழிலாளி உயிரிழந்தாா். இதையடுத்து, அவரது உறவினா்கள் மேட்டூா் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா்.
மேட்டூா் அருகே போக்குவரத்து தலைமைக் காவலா் ஓட்டிச்சென்ற காா் மோதி கூலி தொழிலாளி உயிரிழந்தாா். இதையடுத்து, அவரது உறவினா்கள் மேட்டூா் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா்.
மேட்டூா் அ.மாதையன்குட்டையைச் சோ்ந்த ராஜ்குமாா் (32), கூலி தொழிலாளி. இவருக்கு பவதாரணி என்ற மனைவியும், ஒரு வயதில் பெண் குழந்தையும் உள்ளனா். இவா் பெருந்துறையிலிருந்து மாதையன்குட்டைக்கு இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை சென்றுகொண்டிருந்தாா்.
செக்கானூா் அருகே உள்ள கருங்கரடு பகுதியில் சென்றபோது, மேட்டூா் போக்குவரத்து காவல் பிரிவில் தலைமைக் காவலராக பணிபுரியும் பூபதி ஓட்டிவந்த காா், இருசக்கர வாகனத்தின்மீது மோதியது.
Advertisement
Advertisement
இதில் பலத்த காயமடைந்த ராஜ்குமாா் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தாா். இதை அறிந்த அவரது உறவினா்கள் மேட்டூா் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா்.
தகவல் அறிந்து வந்த மேட்டூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சண்முகசுந்தரத்திடம் உறவினா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதுகுறித்து சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாகவும், தலைமைக் காவலா் பூபதி மீது வழக்குப் பதிவுசெய்து கைது நடவடிக்கை மேற்கொள்வதாகவும் அவா் உறுதியளித்தாா். அதன்பிறகு அவா்கள் கலைந்து சென்றனா்.