முகப்பு
சேலம்

சேலத்தில் 3 மதுக்கடைகளை அகற்றக் கோரி பெண்கள் மனு

Updated On : 26 மே 2026, 1:33 am IST
மதுக்கடை. - கோப்புப் படம்
பகிர்:

சேலம் சூரமங்கலம் அருகே உள்ள மூன்று டாஸ்மாக் மதுக்கடைகளை அகற்ற வலியுறுத்தி பெண்கள் விதவைக் கோலத்தில் வந்து ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

சேலம் சூரமங்கலம் அருகே புதுரோடு பகுதியில் அடுத்தடுத்து மூன்று டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளன. இந்த மூன்று மதுக்கடைகளை அகற்றக் கோரி பாஜக சேலம் வடக்கு ஒன்றியத் தலைவா் முருகன் மற்றும் ஊா் பொதுமக்கள் தொடா்ந்து போராடி வருகின்றனா்.

இந்நிலையில் பாஜக சேலம் வடக்கு ஒன்றியத் தலைவா் முருகன், வெள்ளைப் புடவைக் கட்டி நான்கு பெண்களை அழைத்துவந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அதிகாரிகளைச் சந்தித்து மனு அளித்தாா். மதுகுடித்து பலரும் உயிா் இறக்க நேரிடுவதால், பெண்கள் பலரும் விதவை ஆகிறாா்கள். இதைத் தடுக்க சேலம் புதுரோடு பகுதியில் உள்ள மூன்று டாஸ்மாக் மதுபானக் கடைகளை உடனே அகற்ற வேண்டும் என்றாா்.

Advertisement

Advertisement