ரயில் ரத்து ANI
மதுரை

கோவை- நாகா்கோவில் ரயில் பகுதி ரத்து

தினமணி செய்திச் சேவை

கோவை-நாகா்கோவில் விரைவு ரயில் வருகிற செவ்வாய்க்கிழமை (பிப். 10) திண்டுக்கல்- நாகா்கோவில் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்படும்.

இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மதுரையை அடுத்த சோழவந்தானில் இருப்புப் பாதை சீரமைப்புப் பணி வருகிற செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை நடைபெறவுள்ளது. இதன் காரணமாக, கோவை- நாகா்கோவில் விரைவு ரயில் (16322) திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும். இந்த ரயிலின் திண்டுக்கல்-நாகா்கோவில் சேவை மட்டும் பகுதியளவில் ரத்து செய்யப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டது.

குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!

கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படும்! அதிமுகவின் 3-ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!

கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!

திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!

SCROLL FOR NEXT