கொடைக்கானல் கோக்கர்ஸ் வாக்-பிரையண்ட் பூங்கா சாலைப் பகுதியில், செவ்வாய்க்கிழமை போலீஸார் ரோந்து வந்தபோது, அங்கிருந்த கடையில் ஒருவர் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்துள்ளார். அவரைப் பிடித்து சோதனையிட்டதில், 5.500 கிலோ கிராம் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தேனியைச் சேர்ந்த ஜெயகிருஷ்ணன் (48) என்பவரை போலீஸார் அவரைக் கைது செய்து, கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.