திண்டுக்கல்

கமல்ஹாசன் நற்பணி மன்றம் நிலவேம்புக் குடிநீர் விநியோகம்

DIN

பழனியில் கமல்ஹாசன் நற்பணி மன்றம் சார்பில் செவ்வாய்க்கிழமை நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.
      பழனி உழவர் சந்தை பகுதியில் டெங்கு காய்ச்சல் தகவலும், எச்சரிக்கையும் என்ற தலைப்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசுரங்களை  வழங்கி, நிலவேம்பு குடிநீர்விநியோகித்தனர்.  நிகழ்ச்சிக்கு மாவட்ட நிர்வாகி இமாம்ஹாசன் தலைமை வகித்தார்.  மாவட்ட நிர்வாகிகள் விஜய்கண்ணன், சுந்தர்ராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். ஏராளமான பொதுமக்களும், விவசாயிகளும் அதனை வாங்கி விரும்பி அருந்தினர். விழா ஏற்பாடுகளை நகர நிர்வாகிகள் மனோகரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். நெய்க்காரபட்டி, கோரிக்கடவு உள்ளிட்ட கிராமங்களிலும் நிலவேம்புக் குடிநீர் வழங்கப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மகள்!

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது பாஜக: நீட்டா டிசோசா

குஜராத் சமூக ஆர்வலர் கொலை: பாஜக முன்னாள் எம்.பி. விடுதலை!

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

SCROLL FOR NEXT