ஆன் லைன் லாட்டரிச் சீட்டு விற்ற 4 பேர் கைது
பழனி அடிவாரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஆன் லைன் லாட்டரி சீட்டு விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
பழனி அடிவாரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஆன் லைன் லாட்டரி சீட்டு விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
பழனி அடிவாரம் பகுதியில் ஆன்லைன் லாட்டரி சீட்டுக்கள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து ஞாயிற்றுக்கிழமை அடிவாரம் போலீஸார் ரோந்துப்பணி மேற்கொண்டனர். அப்போது ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்றதாக பைசல் (28), ரஞ்சித்குமார் (29), வெங்கடாச்சலம் (31) மற்றும் சிவபெருமான் (30) உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்களிடம் இருந்து ரூ.36 ஆயிரம் ரொக்கம், 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.