திண்டுக்கல்

சீன உற்பத்தி பொருள்கள் ஆக்கிரமிப்பை மத்திய அரசு தடுக்க வேண்டும்: தம்பிதுரை

DIN

இந்திய பொருளாதாரத்தை சீனப் பொருள்கள் ஆக்கிரமித்து வருவதை, மத்திய அரசு தடுத்து நிறுத்தி பாரம்பரிய சிறு தொழில்களை பாதுகாக்க வேண்டும் என மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை தெரிவித்தார்.
     திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை மற்றும் சுற்றுப்புற பகுதியில், செவ்வாய்க்கிழமை பொதுமக்களை சந்தித்து குறை கேட்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
    சிவகாயில், பல ஆண்டுகளாக இயங்கி வரும் பட்டாசு ஆலைகளை மூடுவதன் மூலம், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் சூழல் உருவாகும். அதே நேரத்தில், சீன பட்டாசுகள் இந்திய சந்தைகளை ஆக்கிரமிக்கும் நிலை ஏற்படும். சீனாவின் பல்வேறு உற்பத்தி பொருள்கள், இந்திய பொருளாதாரத்தை ஏற்கெனவே சீரழித்து கொண்டிருக்கின்றன. பல்வேறு சிறு தொழில்கள் நலிவடைந்துவிட்டன.  இந்திய எல்லையை மட்டுமின்றி, சீன உற்பத்தி பொருள்களை இங்கு சந்தைப்படுத்துவதன் மூலம் பொருளாதாரத்தையும் சீனா ஆக்கிரமித்து கொண்டிருக்கிறது. இந்தியாவில், அந்திய பொருள்களை வாங்குவதை தடுக்க வேண்டும். நம்முடைய பாரம்பரிய தொழிற்சாலைகளை பாதுகாக்க மத்திய அரசு துணை நிற்க வேண்டும். தமிழக அரசு சார்பில், பட்டாசு தொழிலை பாதுகாப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூர்யா - 44 இசையமைப்பாளர் அறிவிப்பு!

அமைதிக்கான நேரம்! தன்வி ராம்..

சங்கம்விடுதியில் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம்? சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு

வேலைவாய்ப்பு பெற்ற மாணவர்களின் சராசரி ஊதியம் ரூ.22 லட்சம்: ஐஐடி சென்னை

வலுக்கும் ஏஐ போட்டி: கூகுளின் புதிய தயாரிப்புகள் வலு சேர்க்குமா?

SCROLL FOR NEXT