மதுரையிலிருந்து சேலத்திற்கு சென்ற தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு திண்டுக்கல்லில் புதன்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் நடைபெற்ற முத்துராமலிங்கத் தேவா் குருபூஜை விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, பின்னா் மதுரை வழியாக சேலத்திற்கு காரில் புறப்பட்டுச் சென்றாா். அப்போது, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அடுத்துள்ள அரசு சுற்றுலா மாளிகைக்கு வந்த முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு, வனத்துறை அமைச்சா் சி.சீனிவாசன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றாா்.
நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி, முன்னாள் அமைச்சா் இரா.விசுவநாதன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.