திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம்-அவிநாசிபாளையம் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி தீவிரம்

DIN


திண்டுக்கல் மாவட்டம்,  ஒட்டன்சத்திரம்-அவிநாசிபாளையம் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஒட்டன்சத்திரத்தில் இருந்து திருப்பூர் மாவட்டம் அவிநாசிபாளையம் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது அந்த பணி ஒட்டன்சத்திரம் -தாராபுரம் சாலையில் ஒட்டன்சத்திரம் நகராட்சி எல்லைக்குள் நடைபெற்று வருகிறது. அதில் ஒரு பகுதியில் சாலை அமைக்கும் பணியும், மறுபகுதியில் வாகனப் போக்குவரத்தும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
மதுரை,தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. அதில் ஒரு சில பேருந்துக்கள் மற்றும் சில கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்லாமல் சாலை அமைக்கும் பகுதியில் செல்வதால் வாகன நெரிசல் ஏற்படுகிறது. 
இதனால் சாலை அமைக்கும் வரை அனைத்து வாகனங்களும் மாற்றுப்பாதையில் செல்ல காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT