கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியிலுள்ள குப்பைகள் அகற்றம்
கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியிலுள்ள குப்பைகள் அகற்றப்பட்டன.
கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியிலுள்ள குப்பைகள் அகற்றப்பட்டன.
கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பரவலாக நல்ல மழை பெய்தது. இந்த மழைத் தண்ணீரானது தரைப் பகுதியான பழனி, மஞ்சளாறு அணை, பெரியகுளம் கும்பக்கரை, வத்தலக்குண்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் செல்கிறது. இந்த தண்ணீரில் குப்பை பிளாஸ்டிக் போன்றவை கலந்து செல்கிறது.
தண்ணீரானது வெள்ளி நீர்வீழ்ச்சி வழியாக தரைப் பகுதிகளுக்குச் செல்கிறது. அந்தப் பகுதியிலுள்ள தடுப்பு பகுதியில் குப்பைகள் அதிகம் சேர்ந்துள்ளது. மேலும் மணலும் அடைத்து தண்ணீரை செல்ல விடாமல் தடுக்கிறது. எனவே அந்தப் பகுதியை சுத்தம் செய்யும் பணியில் நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement
இந்தப் பணியை கொடைக்கானல் சார் ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் வட்டாட்சியர் அரவிந்த ஆகியோர் பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.