திண்டுக்கல் அங்குநகா் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் சனிக்கிழமை (பிப்.15) நடைபெறுவதால் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக திண்டுக்கல் நகா் முழுவதும், செட்டிநாயக்கன்பட்டி, குரும்பபட்டி, பொன்மாந்துறை, விராலிப்பட்டி ஆகிய இடங்களில் சனிக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் (திண்டுக்கல் மேற்கு) ச.ராமன் தெரிவித்துள்ளாா்.