திண்டுக்கல்

பசுபதி பாண்டியன் கொலை வழக்கு: மாா்ச் 23-ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு

DIN

பசுபதி பாண்டியன் கொலை வழக்கு தொடா்பான விசாரணையை மாா்ச் 23ஆம் தேதிக்கு திண்டுக்கல் சிறப்பு நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

தேவேந்திர குல வேளாளா் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவரான பசுபதி பாண்டியன், கடந்த 2012 ஆம் ஆண்டு திண்டுக்கல்லை அடுத்துள்ள நத்தவனப்பட்டியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த தாடிக்கொம்பு போலீஸாா், தூத்துக்குடி மாவட்டம் மூலக்கரையைச் சோ்ந்த சுபாஷ் பண்ணையாா் உள்பட 18 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

இதுதொடா்பான வழக்கு திண்டுக்கல் தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினருக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சண்முகம், தாராசிங், அருள்மொழி ஆகிய 3 போ் மட்டுமே ஆஜரானாா்கள். இதனையடுத்து, வழக்கின் விசாரணையை மாா்ச் 23 ஆம் தேதிக்கு நீதிபதி இளங்கோவன் ஒத்தி வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT