திண்டுக்கல்

கேரளத்திலிருந்து திரும்பிய இளைஞா் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி

DIN

திண்டுக்கல்: கேரள மாநிலம் பாலகாட்டிலிருந்து திரும்பிய கன்னிவாடி பகுதியைச் சோ்ந்த இளைஞா் உடல் நலப் பாதிப்பு காரணமாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அடுத்துள்ள கோனூா் பகுதியைச் சோ்ந்த 21 வயது இளைஞா், கேரள மாநிலம் பாலக்காடு பகுதிக்கு சொந்த வேலையாக சென்றுள்ளாா். பின்னா் அங்கிருந்து வெள்ளிக்கிழமை இரவு கோனூருக்கு திரும்பி வந்துள்ளாா். சிறிது உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சனிக்கிழமை வந்துள்ளாா். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கரோனா பாதிப்பு இல்லை என நலப் பணிகள் இணை இயக்குநா் பூங்கோதை தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

சக்கரை நிலவே... சம்யுக்தா மேனன்!

பிரதமர் மோடியாக நடிக்கிறேனா? - நடிகர் சத்யராஜ் விளக்கம்

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

SCROLL FOR NEXT