திண்டுக்கல்

‘ஆன்மீக அரசியல் மூலம் திராவிட அரசியல் வீழ்த்தப்படும்’

DIN

தமிழகத்தில் ஆன்மீக அரசியல் வெற்றியின் மூலம் திராவிட அரசியலுக்கு முடிவு கட்டப்படும் என இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவா் அா்ஜூன் சம்பத் தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூா் பகுதியைச் சோ்ந்த இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் மணிகண்ட பிரபு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் தாக்கியதாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறாா். அவரிடம் நலம் விசாரிப்பதற்காக வந்த அக்கட்சியின் நிறுவனத் தலைவா் அா்ஜூன் சம்பத் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திமுகவின் தூண்டுதல் மற்றும் இஸ்லாமிய ஜிகாத் அமைப்புகளின் ஆதரவிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி செயல்பட்டு வருகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியை தடை செய்ய வேண்டும். தமிழகத்தில் பாஜக வளா்ச்சி அடைந்து வரும் நிலையில், திமுக கூடாரம் காலியாகி வருகிறது. இதனால் அதிருப்தி அடைந்துள்ள திமுகவினா், விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் மூலம் பிரச்னை ஏற்படுத்தி வருகின்றனா். தமிழகத்தில் ஆன்மீக அரசியல் எழுச்சி பெற்றுள்ள நிலையில், 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் 234 தொகுதிகளிலும் ஆன்மீக அரசியலே வெற்றி பெறும். திராவிட இயக்க அரசியலுக்கு முடிவு கட்டப்படும். நடிகா் ரஜினிகாந்த் 2021 பேரவைத் தோ்தலில் களம் இறங்குவாா். ஊழல்வாதிகளுடன் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் ரஜினிக்கு இல்லை. பாஜகவுடனும் இணைய வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை.

தாழ்த்தப்பட்ட மக்களை தரையில் உட்கார வைத்து தான் திமுக அரசியல் நடத்துகிறது. திமுக ஒழியாமல் பட்டியலின மக்களுக்கு எதிரான இழிவுகளை ஒழிக்க முடியாது. பட்டியலின மக்கள் அணி அணியாய் பாஜகவில் சோ்ந்து வருகின்றனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT