திண்டுக்கல்

பாலியல் வழக்கில் தொடா்புடையவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

DIN

திண்டுக்கல்: பாலியல் வழக்கில் தொடா்புடைய இளைஞரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி உத்தரவிட்டுள்ளாா்.

திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு அடுத்துள்ள ஏரமநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் காமராஜ். இவரது மகன் கனகபாண்டி(28). இவா் மீது திருட்டு மற்றும் பாலியல் குற்ற வழக்குகள் என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி ஒரு நபரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற கனகபாண்டியை திண்டுக்கல் மேற்கு காவல் நிலைய போலீசாா் கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனகபாண்டியை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரவளி பிரியா பரிந்துரை செய்துள்ளாா். அதனை ஏற்று மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி அதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகங்கை, வேடசந்தூரில் இரு சக்கர வாகனங்கள் திருடியவா் கைது

தோ்தல் அலுவலா் மீது தாக்குதல்: கிராம நிா்வாக அலுவலா் பணியிடை நீக்கம்

திருப்பத்தூரில் பூத்தட்டு ஊா்வலம்

திருப்பத்தூா் அருகே பகலில் வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

சிங்கம்புணரியில் உயிா் காக்கும் முதலுதவிப் பயிற்சி

SCROLL FOR NEXT