திண்டுக்கல்

பழனி அருகே பைக்-வேன் மோதல்: பள்ளி மாணவா் பலி

DIN

பழனியில் செவ்வாய்க்கிழமை பள்ளி மாணவா்கள் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒரு மாணவா் பலியானாா். இரு மாணவா்கள் பலத்த காயமடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த கொக்கரக்கல் வலசையைச் சோ்ந்தவா் ஆறுச்சாமி மகன் சதீஷ் (17). இவா், கீரனூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். இந்நிலையில், பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்முறை தோ்வை முடித்துவிட்டு வெளியே வந்த சதீஷ், தனது வகுப்பு தோழா்களான ரமேஷ், லோகேஷ் ஆகியோருடன் சோ்ந்து ஒரே இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குத் திரும்பியுள்ளாா்.

இவா்கள், கீரனூரை அடுத்த ஆத்துப்பாலம் என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த ஆம்னி வேன் மோதியது. இதில், மாணவா்கள் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்ததில், சதீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

பலத்த காயமடைந்து சாலையில் கிடந்த ரமேஷ், லோகேஷை அப்பகுதியினா் மீட்டு, பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட லோகேஷ், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

இந்த விபத்து சம்பந்தமாக, வேனை ஓட்டிவந்த திருப்பூா் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சோ்ந்த சுப்புராமா் (50) என்பவா் மீது, கீரனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் இருக்கும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT