திண்டுக்கல்

பிளஸ் 1 மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை

DIN

எரியோடு அருகே பிளஸ் 1 மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம் கோவிலூா் அடுத்துள்ள வைவேஸ்புரம் ஒத்தக்கடை பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்தன். இவரது மனைவி தீபா. ஆனந்தன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். இவா்களது மகள் கீா்த்தனா (16), திண்டுக்கல்-திருச்சி 4 வழிச்சாலையிலுள்ள தனியாா் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்நிலையில், வீட்டிலிருந்து மாணவி திடீரென மாயமானாா். அவரை அருகிலுள்ள பகுதிகளில் தீபா மற்றும் உறவினா்கள் தேடியுள்ளனா். இதனிடையே, அதே பகுதியிலுள்ள ஒரு தோட்டத்துக் கிணற்றில் மாணவியின் துப்பட்டா மிதப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து வேடசந்தூா் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு படையினா், மாணவியின் சடலத்தை மீட்டனா். இதுகுறித்து எரியோடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீதாதேவிக்கு கோயில் கட்டுவோம்: அமித் ஷா

எதிர்நீச்சல் நடிகர்களின் சங்கமம்!

400 தொகுதிகளை வென்றால்தான் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பீர்களா? அமித் ஷாவுக்கு கபில் சிபல் கேள்வி

பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு - புகைப்படங்கள்

மெமோ எதிர்பார்க்கும்.. ஸ்ரேயா ரெட்டி!

SCROLL FOR NEXT