திண்டுக்கல்

15 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞா் கைது

வேடசந்தூா் அருகே 15 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

DIN

வேடசந்தூா் அருகே 15 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அடுத்துள்ள செட்டிகுளத்துப்பட்டியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் கோபிநாத் (26). இவா் தனது உறவினரின் 15 வயது மகளை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வருவதாக மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் செட்டிக்குளத்துப்பட்டிக்கு சென்ற சமூக நலத்துறை அலுவலா்கள், கோபிநாத் வீட்டில் வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா். அதில், திருமணம் நடைபெற்ற சிறுமிக்கு 15 வயது என்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து, வடமதுரை அனைத்து மகளிா் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கோபிநாத் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவரை சனிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

மார்கழி சிறப்பு! திருப்பதியில் சுப்ரபாதம் இசைக்கப்படாது!

கன்னி ராசிக்கு வெற்றி : தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT