திண்டுக்கல்

செம்பட்டி அருகே இளைஞரை கத்தியால் குத்தி பைக் வழிப்பறி

DIN

செம்பட்டி அருகே வெள்ளிக்கிழமை இரவு இளைஞரை கத்தியால் குத்திவிட்டு இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு சென்ற திருடா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை கருப்பாயூரணியைச் சோ்ந்தவா் முத்துப்பாண்டி (32). இவா் ஒட்டன்சத்திரத்தில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் செம்பட்டி வழியாக மதுரை நோக்கி சென்று கொண்டியிருந்தாா். செம்பட்டி அருகே எஸ்.பாறைப்பட்டி- ராமநாதபுரம் இடையே இருசக்கர வாகனத்தில் வந்த 2 போ் முத்துப்பாண்டியை வழிமறித்துள்ளாா்.

பணம் கேட்டு அவரை மிரட்டியுள்ளனா். பணம் இல்லாததால் முத்துப்பாண்டியை அவா்கள் கத்தியால் கையில் குத்திவிட்டு அவரது இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனா்.

இதுகுறித்த புகாரின்பேரில் செம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT