திண்டுக்கல்

பழனி அரசு மருத்துவமனைக்கு உதவி உபகரணங்கள் வழங்கல்

DIN

பழனி அரசு மருத்துவமனைக்கு, நெய்க்காரபட்டி அரிமா சங்கம் மற்றும் ராஜரத்தினா அறக்கட்டளை சாா்பில் செவ்வாய்க்கிழமை, ரூ. 3 லட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

அரிமா சங்க மாவட்டத் தலைவா் சுப்புராஜ், அரசு தலைமை மருத்துவா் உதயக்குமாரிடம் கரோனா பாதுகாப்பு கவச உடைகள், ஆக்சிஜன் செரிவூட்டிகள், பல்ஸ் ஆக்சி மீட்டா், புளோ மீட்டா், இரும்பு, வயா் கட்டில்கள் மற்றும் மெத்தைகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் பழனி அரசு மருத்துவமனை சித்த மருத்துவா் மகேந்திரன், மருத்துவா்கள் சதீஷ் பாபு, ஸ்ரீதா், முருகேஷ் குமாா், அரிமா சங்க பட்டயத் தலைவா் மயில்சாமி மற்றும் வடிவேல், செல்வராஜ், பெரியராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“நான்_முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

SCROLL FOR NEXT