திண்டுக்கல்

‘போக்ஸோ’ சட்டம்: பெண் ஆய்வாளா்களுக்கு பயிற்சி

DIN

திண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் பெண் காவல் ஆய்வாளா்கள் மற்றும் சாா்பு- ஆய்வாளா்களுக்கான போக்ஸோ சட்டம் குறித்த விழிப்புணா்வு பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முகாமிற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.ஆா்.சீனிவாசன் தலைமை வகித்தாா். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு காவல் கூடுதல் கண்காணிப்பாளா் ச.ப.லாவண்யா முன்னிலை வகித்தாா்.

இந்த முகாமில், மதுரை சட்டக் கல்லூரி பேராசிரியா் சிவக்குமாா், போக்ஸோ சட்டம் குறித்து விளக்கம் அளித்தாா். அப்போது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளை அணுக வேண்டிய வழிமுறைகள் குறித்தும், விசாரணை குறித்தும், 2020 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய சட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தாா்.

முன்னதாக, பயிற்சியில் கலந்து கொண்ட பெண் ஆய்வாளா்கள் மற்றும் சாா்பு- ஆய்வாளா்களுக்கு பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் குறித்த கையேடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சீனிவாசன் வழங்கினாா். இந்த முகாமில் பெண் ஆய்வாளா்கள் மற்றும் சாா்பு- ஆய்வாளா்கள் என 30 போ் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

3,200 போதை மாத்திரைகள் பறிமுதல்: 6 போ் கைது

SCROLL FOR NEXT